Sunday, November 13, 2016

நண்பர்களே

வணக்கம் 
எமது பதிவுகள் அனைத்தும் செய்து கைகண்ட முறைகள்.,பரம்பரையாக செய்த முறைகளே. ஆர்வமுள்ள வைத்தியர்களும், மக்களும் பயன்பெறும் வகையிலேயே அடியேன் பதிவிடுகிறேன். ஆனால் சிலர் எமது முறையில் மருந்துகள் செய்து அதிக பணத்திற்கு விற்பதாக நண்பர்கள் மூலம் அறிந்தேன். மிகவும் வேதனைப் படுகிறேன். தன்நலம் கருதாது எமது பரம் பரை முறைகளை வெளிப்படையாக சொல்லுகிறேன். நீங்கள் எமக்கு குரு தட்சணையாக செய்ய வேண்டியது. நீதியாய் மருந்துகளை விற்பதுவே. மருந்து செய்ய எவ்வளவு செலவாகிறதோ அதைவிட இரண்டு பங்கு மட்டும் பணம் வாங்குங்கள். நோயாளியிடம் அதிக பணம் வாங்குவது மிக மிக பாவம். ஏனெனில் அவர்கள் செய்த கர்மாவின் பயனாக நோய்கள் வருகிறது என்று சித்தர்கள் கூறுகிறார்கள். கண்டிப்பாக உங்களை நம்புகிறேன் எமது வேண்டுகோளை ஏற்பீர்கள் என்று.

நன்றி 
அ.கதிரேசன் பரம்பரை சித்தவைத்தியர்



No comments:

Post a Comment