Sunday, November 13, 2016

அயக்காந்தச்செந்தூரம் (தாது விருத்திக்கு)

சுத்தி செய்த இரும்புத்தூள், காந்தம், கெந்தகம் வகைக்கு 35 கிராம். பூநீரு 7 கிராம் இவற்றை கல்வத்திலிட்டு எலுமிச்சம் பழச்சாற்றால் 12 மணிநேரம் அரைத்து வில்லை செய்து காயவைத்து 50 எருவில் புடம் போடவும். செந்துரம், சரிவர சிவக்கா விட்டால் மீண்டும் மேற்படி சாற்றால் அரைத்து புடம் போடவும், (5 புடம் போடவும்) நல்ல செந்தூரம் கிடைக்கும். காலை மாலை 5அரிசி எடை எடுத்து தேன் அல்லது தாதுவிருத்தி லேகியங்களில் சாப்பிடவும். தீரும் நோய்கள் : உடல் பலகீனம்., நரம்பு தளர்ச்சி., இரத்தச் சோகை, ஆண்மை விருத்தி , இரத்தவிருத்தி செய்யும்., இது எமது பரம்பரை முறையாகும்

நன்றி 
அ.கதிரேசன் பரம்பரை சித்தவைத்தியர்

No comments:

Post a Comment