Thursday, November 24, 2016

நீலித்தைலம்

அவரியிலைச்சாறு,சவரிக்கொடிச்சாறு,பொண்ணாங்கண்ணிச்சாறு,கரிசலாங்கண்ணிச்சாறு, மருதாணியிலைச்சாறு, கருவேப்பிலைச்சாறு,ஆலம்விழுதுச்சாறு, ஒத்த செம்பரத்தைப் பூ 20, வேம்பாடம் பட்டை, பூலாங்கிழங்கு, சிறு நன்னாரி வேர், கடைச்சரக்குகள் வகைக்கு 10 கிராம், சாறுவகைகள் வகைக்கு 20 மில்லி, கீழாநெல்லியிலை 50 கிராம், இம்மூலிகையை மட்டும் அரைத்து எடுத்துக் கொள்ளவும் மேற்படி கடைச்சரக்குகளை இடித்துக்கொள்ளவும் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அதில் தேங்காய் எண்ணெய் 500 மில்லி விட்டு நன்கு கலந்து கடுகு திரள் பதத்தில் காய்ச்சி வடித்துக் கொள்ளவும். இந்த எண்ணெய்யை தினம் தேய்த்து வரவும். தீரும. நோய்கள் : முடிஉதிர்தல், இளநரை, தலையரிப்பு, போடுகு, கண்ணெரிச்சல், பேன் தொல்லை, ஆகியவை நீங்கி கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும், கண்பார்வை தெளிவடையும். இது எமது அனுபவமுறையாகும்.
தொடர்புக்கு :00919865070850
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

No comments:

Post a Comment