Thursday, November 10, 2016

தெரிந்து கொள்ளவும் நண்பர்களே

முறையாக ஒரு மருந்தை செய்ய எத்தனை நாள் ஆகும் என்பதை காண்போம் :

ஒரு மருந்தை அரைப்பதற்கு (4சாமம் -என்பது 12 மணிநேரம்) இரண்டு நாள் ஆகிறது. ஒருநாளைக்கு 6 மணிநேரம்தான் அரைக்க முடியும்.
 (கையரைவை) . அரைத்த மருந்தை வில்லை செய்து காயவைக்க ஒருநாளாகும்,
வில்லையை அகலில் வைத்து சீலைமண் செய்தது காயவைக்க 1/2 நாள் ஆகிறது.     மருந்துள்ள அகலை புடத்தில் வைத்து தீமூட்டி சூடு ஆற ஒருநாள் ஆகிறது.,         ஆக ஒரு முறை புடம் போட 41/2 முதல் ஐந்து நாட்கள் ஆகிறது.,

இதன்படி 10 புடம் போட 50 நாள் ஆகும், இதற்கான சூழல் நகரங்களில் இல்லை (புடம் போடும் போது புகை நிறையவரும்) எப்படி நிறைய சித்தவைத்தியர்கள் மருந்தை செய்கிறார்கள்????? நிறைய சித்தவைத்தியர்கள் சில மருந்து நிறுவங்களை நம்பியே உள்ளார்கள், சிந்தித்து முடிவெடுங்கள்,

நான் சித்த மருத்துவத்திற்கு எதிரியில்லை!! அதை முறையாக சிறப்பிக்கவே பல எதிர்ப்புக்களை சேர்த்தவன்,
நன்றி
அ.கதிரேசன் பரம்பரை சித்தவைத்தியர் 

No comments:

Post a Comment