Monday, February 27, 2017

வெள்ளிச் செந்தூரம் :




வெள்ளி ரேக் (வெள்ளித்தூள்) 10 கிராம், சுத்தித்த ரசம் 80 கிராம்,  சுத்தித்த கெந்தகம் 160 கிராம்.

செய்முறை :::
முதலில் ரசத்தை கல்வத்திலிட்டு பிறகு வெள்ளித்தூளைப் போட்டு அரைக்க ரசவெண்ணையாகும் இதை 6 மணிநேரம் அரைத்து பிறகு கெந்தகம் சேர்த்து அரைத்து வர கருப்பாக கண்ணாடித்தூள் போல பளபளக்கும் இதை ஒரு மணிநேரம் அரைத்து, பிறகு கற்றாழைச்சாறு விட்டு 6 மணிநேரம் அரைத்து , பிறகு செம்பருத்திப்பூ சாறு விட்டு அரைத்து, உலர்ந்த பிறகு பொற்றிலைக்கரிப்பான் சாற்றில் அரைத்து சிறுபயறு அளவாக உருட்டி நன்கு காயவைத்து ஏழுசீலை செய்த புட்டியில் போட்டு மாக்கல்லால் மூடி சீலைமண் செய்து வாலுகையில் வைத்து தீபம் 1,,கமலம் 2,, காடாக்கினியாக 4 சாமம் எரித்து  ஆறவிட்டு பிரித்துப் பார்க்க செந்தூரம், அரைத்து பத்திரப்படுத்தவும்.
தீரும் நோய்கள் : ஆண்மை குறைவு, புணர்ச்சியில் விருப்பமின்மை, இரவுநேரத்தில் விந்து வெளியேறுதல், சுவாசகாசம், வாதநோய்கள், தோல் நோய்கள், வெட்டைச்சூடு, மற்றும் பலநோய்களுக்கு தக்க அனுபானத்தில் கொடுக்கலாம். காலை மாலை அரிசி அளவு தேன், லேகியம், சூரணம் இதில் வைத்து சாப்பிடவும், இது எமது பரம்பரை முறையாகும்,
நன்றி

 00919865070850 ,  00919943850856 
அ.கதிரேசன் பரம்பரை சித்தவைத்தியர்
 கல்யாணராமநாதபுரம்.

Monday, December 26, 2016

ஆண்மை விருத்திக்கு வெள்வங்கச் சுண்ணம்


வெள்வங்கப் பற்பம் : சுத்தி செய்த வெள்வங்கத்தை நன்கு கழுவிய இரும்பு சட்டியில் போட்டு அடுப்பு எரிக்க உருகும் போது சிறு அம்மன் பச்சரிசி யிலையை போட்டு வறுக்க மஞ்சள் நிற பற்பம் கிடைக்கும். அதை எடுத்து கல்வத்தில் போட்டு கஞ்சாயிலைச் சாறுவிட்டு 12 மணிநேரம் அரைத்து வில்லை தட்டி காயவைத்து அகலில் வைத்து அகல் மூடி சீலைமண் செய்து 20 எருவில் புடம். மீண்டும் முன்சாற்றால் 12 மணிநேரம் அரைத்து வில்லை செய்து 30 எருவில் புடம் போடவும். இதுபோல 5 புடம் போடவும். காலை, மாலை, அரிசி எடை தாதுவிருத்தி லேகியத்தில் வைத்து சாப்பிடவும், தீரும் நோய்கள் : மேகம் 20, ஆண்மைகுறைவு , சீக்கிரத்தில் விந்து வெளியேருதல், கிரந்தி, கடுப்பு, பிரமியம், மூலச்சூடு, நீரளிவு.தோல் நோய்கள்., இது எமது பரம் பரை அனுபவ முறையாகும்.
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்த வைத்தியர்





3

Thursday, November 24, 2016

நவ மூலத்திற்கு நத்தை லேகியம்

வேண்டிய அளவு நத்தையை கொண்டு வந்து ஒரு இரவு தண்ணீரில் பேட மண்ணை கக்கிவிடும். பிறகு அவித்து நத்தையின் கறியை 50 கிராம், எடுத்துக் கொள்ளவும். சாதிக்காய் 10 கிராம், சாதிபத்திரி 10 கிராம், கிராம்பு 10 கிராம். இவரை இடித்து தூள் செய்து கொள்ளவும். நத்தைக்கறியை முதலில் நன்கு அரைத்து கொண்டு பிறகு தூள் செய்த மருந்தையும் போட்டு நன்கு அரைத்த பின் கல்கண்டு 80 கிராம் சேர்த்து அரைக்கவும். பின் தேவையன அளவு தேன் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். ஒரு மாதம் வரைகெட்டுப்போகாது. இருப்பினும் 15 நாட்களுக்கு ஒரு முறை செய்து கொள்வது உத்தமம். காலை, மாலை, எலந்தப் பழம் அளவு எடுத்து சாப்பாட்டுக்கு முன் சாப்பிடவும். பின் ஒரு குவளை பால் சாப்பிடவும். இதுபோல நோய் தீரும் வரை சாப்பிடலாம். பத்தியம் : அதிக காரசாரமான உணவுகளை நீக்கவும். தீரும் நோய்கள்: வெளிமூலம், உள்மூலம், மூலமுளைகள், இரத்தமூலம், ஆசனவாய் எரிச்சல்., இது எமது பரம்பரை அனுபவ முறையாகும்
தொடர்புக்கு :00919865070850
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

பித்த சூரணம்

சுக்கு,மிளகு.,அரிசி திப்பிலி,ஓமம், பெருங்காயம் , பெருங்காயத்தை நல்லெண்ணெய்யில் போட்டு பொறித்துக்கொள்ளவும். மற்றச் சரக்குகளை நன்கு காயவைத்து இடித்து துணியில் சலித்துக்கொள்ளவும். மேற்கண்ட மருந்துகள் சமஅளவாககலந்து கொள்ளவும், 1/4 டீஸ்பூன் அளவு எடுத்து எலுமிச்சம் பழத்தை ஊறுகாய் பேல் அரிந்து அதற்குள் மேற்படி மருந்தை வைத்து இரவில் பனியில் வைத்து காலையில் பிழிந்து சாப்பிடவும். பிறகு இஞ்சியை மேல்தோல் நீக்கி நைத்து கசாயம் வைத்து சாப்பிடவும் இதுபோல 3அல்லது 5அல்லது 7 நாள் சாப்பிடவும். தீரும் நோய்கள் : பித்தம்., மயக்கம்., தலைசுற்றல்., பசியின்மை, செறிமானக்கோளாறு, நெஞ்செரிவு, வாய் நீரூரல்,புளித்த யேப்பம், பித்த வாயு,ஓக்காளம்,போன்றவை தீரும். இது எமது அனுபவ முறையாகும். தொடர்புக்கு :00919865070850
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

நீலித்தைலம்

அவரியிலைச்சாறு,சவரிக்கொடிச்சாறு,பொண்ணாங்கண்ணிச்சாறு,கரிசலாங்கண்ணிச்சாறு, மருதாணியிலைச்சாறு, கருவேப்பிலைச்சாறு,ஆலம்விழுதுச்சாறு, ஒத்த செம்பரத்தைப் பூ 20, வேம்பாடம் பட்டை, பூலாங்கிழங்கு, சிறு நன்னாரி வேர், கடைச்சரக்குகள் வகைக்கு 10 கிராம், சாறுவகைகள் வகைக்கு 20 மில்லி, கீழாநெல்லியிலை 50 கிராம், இம்மூலிகையை மட்டும் அரைத்து எடுத்துக் கொள்ளவும் மேற்படி கடைச்சரக்குகளை இடித்துக்கொள்ளவும் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அதில் தேங்காய் எண்ணெய் 500 மில்லி விட்டு நன்கு கலந்து கடுகு திரள் பதத்தில் காய்ச்சி வடித்துக் கொள்ளவும். இந்த எண்ணெய்யை தினம் தேய்த்து வரவும். தீரும. நோய்கள் : முடிஉதிர்தல், இளநரை, தலையரிப்பு, போடுகு, கண்ணெரிச்சல், பேன் தொல்லை, ஆகியவை நீங்கி கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும், கண்பார்வை தெளிவடையும். இது எமது அனுபவமுறையாகும்.
தொடர்புக்கு :00919865070850
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்

மனை (வீட்டில்) யில் பயிர் செய்யக் கூடாத மரங்கள்.
பருத்தி யகத்தி பனை நெல்லி நாவல் எருக்கு புளி முருங்கை யோடு எட்டும் இருக்கில் எந்த மனையானாலும் இந்திரன் வாழுமென்றாலும் அந்த மனைபாழென்றரி. ஆதாரம் ஏடு.
இந்த எட்டு மரங்களை வீட்டருகே வளர்த்தலை தவிர்த்தல் நன்று.

தொடர்புக்கு :00919865070850
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்


கருவங்கச் செந்தூரம்

சுத்தித்த கருவங்கம் எடுத்து ஒரு இரும்பு சட்டியில் போட்டு அடுப்பேற்றி எரிக்க உருகும் அப்போது ஆவாரைஇலையை சிறிது சிறிதாக போட்டு வறுக்க கருவங்கம்,மடியும் இது போல நன்கு மடியும்வரை 6மணி நேரம் வறுக்கவும், மஞ்சள் நிற பற்பம் கிடைக்கும்.இப்பற்பத்தை சோற்றுக்கற்றாழைச் சாற்றில் 6மணிநேரம் அரைத்து வில்லை செய்து அகலில் வைத்து சீலைமண் செய்து 20எருவில் புடம்.இது போல் 5புடம் போடவும்.பிறகு மேற்படி பற்பம் 35கிராம்,ரசம்35 கிராம்,கெந்தகம்35 கிராம், தாளகம்35கிராம்,மனோசீலை 35கிராம்,இவைகளை கல்வத்தில் போட்டு நன்கு அரைத்து பிறகு சோற்றுக்கற்றாழைச் சாற்றால் அரைத்து வில்லை செய்து காய்ந்தவுடன் அகலில் வைத்து மேல்அகல் மூடி சீலைமண்3 செய்து மண்றைவு புடம் போடச் செந்தூரம். சிலநேரங்களில் தீக்குறைவால் கருப்பாக இருந்தால் மீண்டும் மேற்படி சாற்றால் அரைத்து முன் போல் புடமிடவும்,செந்தூரம்கிடைக்கும். இரண்டு அரிசி அளவு எடுத்து நெய்யில் கலந்து கொடுக்கவும். மேகம் 21,படைகள், சொரி,குஷ்டம்,பாண்டு,காமாலை,சோரியசிஸ்,தீரும்.
தொடர்புக்கு :
00919865070850
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்